Feb 4, 2013

டுவீற்றர் வானில் - III



 
Anto_brindha Anto brindha

இருப்பதோ ஒரே பூமியில் தான்.. ஆனால் என்னவர்களை கண்டு பிடிப்பதில் மட்டும் எத்தனை போராட்டங்கள்...
 
kunthavai13 anu

சில மனிதர்களைவிட தனிமையை அதிகம் நேசிக்கத் தோன்றுகிறது ...
 
kunthavai13 anu

யாரும் தந்து யாரும் வாழ்வதில்லையாம் # அன்பைத்தவிர .
 
kunthavai13 anu

அந்திவானத்து சூரியனுடன் அன்றைய நாளின் கசப்புகளும் மறைந்து போனால் எவ்வளவு நலமாக இருக்கும் ?!
 
Anto_brindha Anto brindha

நீ இருக்கும் போது வெளிப்படாத பாசம் உன்னை இழந்த போது அதிகமாக வெளிக்காட்டி என்னை கொள்கிறதே..
davuttu டவுட்

தன்னை நிருபித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் இருக்க தான் செய்யுது ....
 
soshrulez பிரியமான தோழி

மிக அதிகமான நெருக்கம்,மிக பெரிய பிரிவையும் தந்துவிடும், அளவில்லாமல் நேசிப்போம் அளவோடு யாசிப்போம். இனிய வணக்கங்கள் என் நட்பின் உறவுகளுக்கு
 
senthilchn Senthil Nathan

உன்னை சந்திக்க திராணியற்றே உன் பாதையில் இருந்து விலகி நடகின்றேன்...
 
Nmangai sandhyacharu

எப்படி வாழ வேண்டுமென சொல்ல பலர் உள்ளனர் ஆனால் வாழ்ந்து காட்ட தான் எவருமில்லை....
 
RealBeenu sbnu

"கருத்துகளை" நாராக வைத்துக்கொண்டு , "வார்த்தைகளை" பூவாக தொடுக்க வேண்டும்..






No comments:

Post a Comment

பாலைவனம் கடந்து சிறகடித்து கானம் பாடும் இந்த வானம்பாடி ஆறிச்செல்ல சிறு நிழல் தந்தால் போதும் ...