இறைவனின் கண்கள்
என்றும் மூடியிருப்பதனாலோ?.....என்னவோ...
இவன் விடயத்திலும் திறக்கவில்லை!
தொடர்ந்து முயற்சிசெய்,
என்றோ ஒரு நாள் பலனளிக்கும் என்றால்;
தொடர்ந்த முயற்சியின் கால ஓட்டம்
நீண்டு நெடித்து ஆழிப்பேரலையாகி
அவலப்படுத்திய பின்னர்,
பிரகாசமான சூரியோதயம் எதற்கு....?