எனக்கு தெரிந்தவரை டுவீற்றரில் கீச்சிடும் பறவைகளில் பலர் தமக்கான வலைப்பூவை கொண்டுள்ளார்கள். அங்கு தமது டுவீற்றுகளை பதிவிட்டு செல்வதுண்டு... என் எண்ணங்களை வானம்பாடியில் கானம்பாடிட நேரம் கிடைப்பதே அரிது.. ஆன போதும் தொடரான கீதம் ஒன்று வானம்பாடியில் இசைத்திட ஏங்கியது மனம்..
அதற்காக,கற்பனைக்குதிரையின் கடிவாளத்தை தட்டியது... சீ அது நீங்கள்.. இது வானம் பாடியல்லவா? ஆகையால் வானம்பாடியும் சிறகைவிரித்தது கறபனை வானில் சஞ்சாரம் செய்தது.... சில கண்டங்கள் தாண்டி பறந்த போது சிட்டுக்கு சிக்குப்பட்டது, டுவீட்டர் வானில் கீச்சிடும் பக்கத்து பறவைகளின் கீச்சொலிகள்... அதில் வானம்படிக்கு பிடித்தவை....
இந்த வானம்பாடியை சிறைப்பிடித்த உங்கள் கீச்சுகளை இங்கு கானம்பாட டுவீற்றர் பறவைகளே உங்கள் அனுமதி வேண்டுகிறேன்..
Nmangai
sandhyacharu 18 Decவிரும்பிய உறவுகளையும் விருப்பமின்றி பிரிந்தே வாழ வேண்டியுள்ளது...
soniaarun
சோனியா 16 Decஒருவர் அதிகம் குற்றம் செய்வது தன்னுடைய பெற்றோருக்கும் பெற்ற பிள்ளைகளுக்கும்
iamkarki
கார்க்கி 15 Decவாழ்க்கை ஒண்ணும் பரீட்சை இல்லை, அடிஷ்னல் பேப்பர் கேட்க. இருக்கிற ஒரு பேப்பர் தான். :)))