எனக்கு தெரிந்தவரை டுவீற்றரில் கீச்சிடும் பறவைகளில் பலர் தமக்கான வலைப்பூவை கொண்டுள்ளார்கள். அங்கு தமது டுவீற்றுகளை பதிவிட்டு செல்வதுண்டு... என் எண்ணங்களை வானம்பாடியில் கானம்பாடிட நேரம் கிடைப்பதே அரிது.. ஆன போதும் தொடரான கீதம் ஒன்று வானம்பாடியில் இசைத்திட ஏங்கியது மனம்..
அதற்காக,கற்பனைக்குதிரையின் கடிவாளத்தை தட்டியது... சீ அது நீங்கள்.. இது வானம் பாடியல்லவா? ஆகையால் வானம்பாடியும் சிறகைவிரித்தது கறபனை வானில் சஞ்சாரம் செய்தது.... சில கண்டங்கள் தாண்டி பறந்த போது சிட்டுக்கு சிக்குப்பட்டது, டுவீட்டர் வானில் கீச்சிடும் பக்கத்து பறவைகளின் கீச்சொலிகள்... அதில் வானம்படிக்கு பிடித்தவை....
இந்த வானம்பாடியை சிறைப்பிடித்த உங்கள் கீச்சுகளை இங்கு கானம்பாட டுவீற்றர் பறவைகளே உங்கள் அனுமதி வேண்டுகிறேன்..
tamiljokes
Tamil Jokes நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?
NT: டுவீட்டர் வானில் வானம்பாடியை சிறைப்பிடித்த கீச்சுகள் தொடரும்... மாற்றங்களுடன்...
