Sep 18, 2010

காற்றிலே பேசுகிறேன், கேட்கிறதா? - I

ON THE MEMO OF  MY ELDER SISTER


கனவு போல் இருக்கிறது - நேற்று
நடந்தது நம்பமுடியவில்லை.
ஆனால் நிஐம் அது தானே, ம்...
காலத்தின் கோலம் !

அக்கா
நீ எங்கே? அங்கே நீ
நலமா? ஓரேயொரு முறை
வீடு வாவேன், இத்தனை நாளா
கோபமா? எத்தனை முறைதான்
அழைத்துவிட்டேன் கேட்கவில்லையா?

அக்கா
உன்னோடு செல்ல சண்டைகளிட்டு
நாளாச்சு இல்லையா? நான் தொலைவில்
வந்தபோதும் தினமும் விசாரிப்பாய் - மறக்காமல்
சண்டையிட்டு செல்லமாய் கண்டிப்பாய், தனிமையில்
தோல்விகளால் துவண்டபோதெல்லாம் தாய் மடியாய்
வந்தவளே... நீயும் எனக்கொரு தாயம்மா - உன்
சேயின்குரல் இன்னுமா கேட்கவில்லையுனக்கு?

அக்கா
உன்னொடு பேச ஒன்றல்ல
ஓர் ஆயிரம் உண்டம்மா நெஞ்சோடு! நேரில் கூட வேணா,
காற்றில் இல்லை கனவிலாவது வந்து போகமாட்டாயா?
ஒரேயோரு முறை அத்தனையும் கொட்டிட்டு நிம்மதியாய்
ஒரு தூக்கம் உன் மடிமீது போதுமெனக்கு! சின்னதாய்
கலங்கினாலே ஓடி வந்திடுவாய்..... இன்று கூவியழைத்து
நான் களைத்தே போனேன் இன்னுமா உனக்கு
வரத்தோணல.....



[பேச இன்னும் இருக்கு...]

May 30, 2010

போலிகளுககு.......

உனக்குள்ளும் வாழ்க்கை இருக்கு.!


தவறியது நானல்ல, நீ- அது
உனக்கு தெளிவாகத் தெரியும்,
நீ இன்னும் நிலை கொள்ளவேயில்லையே..!!



விட்டதா உன் வறட்டுக் கௌரவம் - நீ
போலி நீயே அறிந்தபின்னும் ,உன்
தோல்வியை இன்னும் மறுக்கிறாயா ?
இல்லை, மறைக்கிறாயா....?



தன்னம்பிக்கை குறைந்தவரே ,
உம் தோல்வியை மறைக்க- என்னை
அழிப்பதால் மட்டும் முடியுமா.....?



ஆனால்,
எல்லாம் அறிந்தும் அறியாமல் - நீர்
சற்றேனும் புரிந்திடுக.....!!



நீர்,
நினைக்கும் போது தளிர்க்கவும்
மீண்டும் கருகவும் - நான்
ஒன்றும் உம்
வீட்டு செடியுமல்ல, கொடியுமல்ல.....!!



நான்
ஆல் போன்றவனல்ல, உண்மைதான் -
புரிந்து கொள்ளும் ,
அறுகு போன்றவன்...!!



உம் நிகழ்காலம் - அது
உமது இறந்தகாலத்தின் மீது நீர்,
போட்ட சோடனைகள் - யாக்கிரதை
வேடமிட்ட முலாம் கலையாது பாத்துவிடும்.....



ஆனால், என்
நிகழ்காலம் நேற்று என்
இறந்தகாலம், நாளை அதுவே - என்
எதிர்காலமும் கூட....!!!!



நான் கருவிலே,
உருக்கொண்டபோது உடன் வந்தது என் உள்ளம், - உமக்கு
மேடை தோறும் மாறும் நாடக வேடமது....!!!



உந்தன் நிழல் கூட
எனக்கு பரிச்சயமானதில்லை, -என்
எண்ண அலைகளும் கூட உம்மை நாடி வரா,
கனவுகளில் வாழ முயலாதே........



உன் பாதையில்,
உன் வழியை தேடிக்கொள்,
என் பாதையில் தேடுகிறாய்
பலனேதுவுமில்லை..!



சிறு சிட்டிவன், இன்று
சிகரமில்லை சிறு குன்று தான்....,
இன்றே நீ வெந்துபோகிறாய்.....
நாளைய விடியலின் போது.....??



நாளைக்கும் நீ வேண்டும்,
ஆனால்
உனக்கு உன் எதிர்காலம் எப்போதுமே????????



நானாக இருக்க
என்னால் மட்டுமே முடியும்!
வீணாக உன் த்னித்துவத்தை இழக்காதே...!!
இன்று மட்டுமல்ல, இறுதி வரை யாசிக்காதே
என் நட்பை, கனவில் ௯ட....




இறுதியாக ஒன்று - உன்னை
நான் மன்னித்துமல்ல மறந்தே விட்டேன்....
முடிந்தால் நீ, நீயாக இருக்க முயற்சி செய்......


உனக்குள்ளும் வாழ்க்கை இருக்கு.!


Mar 22, 2010

நினைவுகளில் ஓராண்டு.......



கால சுனாமியில்
சாமியிடம் போய்விட்டாய் நீ......
முகவரி தெரியாது உன்னை தேடியலைகின்றோம், எங்கே போனாய் நீ...?
நீ யாரையும் வெறுத்ததில்லை, இங்கு
உன்னை வெறுத்தவரும் யாருமில்லை
இருந்தும் உன்னை ஏன் நீ வெறுத்தாய்.?
எங்கள் சோலையில் நீ
கீதம் பாடும் வானம்பாடி, கானம் பாடாது மறந்து போனதேனோ?
எம் விழிகளின் அருவியோடு விடை பெற்றவளே,நீ
சென்ற பாதைதனை உறவுகள் நாம் தேடுகிறோம் ஆனால்
வழிதான் தெரியவில்லை ........

எமக்கெல்லாம் சிறகடிக்க கற்றுத்தந்தவள் நீ,
உன் சிறகுகளை மட்டும் சுட்டுக்கொண்டதேனோ?

கனவுகள் 1000
கண்களில் மின்னிட எங்கள்
நந்தவனத்தில் பூத்திருந்தாய் நீ
கண்முன்னே கருகி சருகானாய்.................................
கனவில் கூட நினைத்ததில்லை!
அப்பாவி போல் ஏங்கும் சின்னமனம்,
மீண்டும் நீ துளிர்த்திட!!!
வாழ்க்கை ஒரு வழிப்பாதை தனையுமறந்து....???
கனவுகளெல்லாம் நேற்றோடு கானல் நீராயிற்று,
நினைவுகள் மட்டுமே எம்மோடு.....

பாதியிலே வந்த சொந்தமிவன் ஆனாலும்
உன் பாசமும் நேசமும் வேஷமற்றவை!
பாசமலரே என் நந்தவனத்தின் வாடா ரோஜாக்காளில் நீயும் ஒன்று!

மறுபிறவியிருப்பின் மீண்டும் நீ எங்கள் நந்தவனத்தில் பூத்திடவேண்டும்....

 

அன்புடன் 
தம்பி

Feb 26, 2010

பிரகாசமான சூரியோதயம் எதற்கு....?

இறைவனின் கண்கள்
என்றும் மூடியிருப்பதனாலோ?.....என்னவோ...
இவன் விடயத்திலும் திறக்கவில்லை!
தொடர்ந்து முயற்சிசெய்,
என்றோ ஒரு நாள் பலனளிக்கும் என்றால்;
தொடர்ந்த முயற்சியின் கால ஓட்டம்
நீண்டு நெடித்து ஆழிப்பேரலையாகி
அவலப்படுத்திய பின்னர்,
பிரகாசமான சூரியோதயம் எதற்கு....?

Feb 4, 2010

சில சம்பவங்கள் + தொடர் விளைவுகள் = நம்பிக்கைகள்.



பல பதிவுகள், வாதப்பிரதிவாதங்கள், கருத்தாடல்கள், ஆய்வுகள், கட்டுரைகள் க்ணக்கிலடங்காதவை, வாசித்தாகி விட்டது. ஆனால் எதுவுமே என்னை திருப்தி செய்ததாக இல்லை. எல்லாமே ஒரு பக்க சர்பன விவதங்கள் தான், யருமே நடுனிலையில் எழுதவில்லை போலும், அத்னால் தானிங்கே என் தேடல்களும் இன்னும் தொடர்கின்றன போலும்....
தேடினேன் தேடினேன் எனக்குகிடைத்த சந்தர்ப்பங்களனைத்தினதும் எல்லை வரை சென்று தேடினேன். கேள்விக்குறிகள் (?) தொடர்ந்தனவெயன்றி ஒரு முற்றுப்புள்ளிதனும் (.) கிடைக்கவில்லை. ஆனாலும் "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதா விக்கிரமாதித்தன் போல் நானும் வேதாளத்தை இல்லை இல்லை தேடலை தொடர்ந்ததால்...... இன்று பதிவாக உங்கள் பார்வைக்கு...


மூடனம்பிக்கை மூடனம்பிக்கை அப்படிங்கிறங்களே அப்படியின்னா என்னாது?.
முன்னோரின் நம்பிக்கைகள் தான் மூடநம்பிக்கையா? இல்லை, ஆதிமுதல் வலுவாக இருந்து த்ற்போது வலுவிழந்த நம்பிக்கைகள் தான் மூடநம்பிக்கையா? இல்லை மதங்களோடு இரண்டற கலந்துவிட்ட நம்பிக்கைகள் தான் மூடனம்பிக்கைகளாயினவோ? இல்லை, தொடர்பற்ற சம்பவங்களினல் கிடைக்கப்பெற்ற பொரும்பான்மையான முடிவுகளின் மீதான நம்பிக்கைகள் தான் மூடநம்பிக்கையானதுவோ?
 
உ+ம்: 
சம்பவம் 1)- காகம் கரைதல்.
சம்பவம் 2)- விருந்தினர் வருகை.
அவதானம் :- அதே தொடர் சம்பவங்கள் மாறாத பெரும்பான்மையான முடிவுகள்.
முடிவு :- விளைவுகள் மீதான நம்பிக்கை பரப்புரை செய்யப்பட்டு தொடராக கடத்தப்பட்டு நம்பபடுகிறது.
இவ்வாறான தொடர்பற்ற சம்பவங்களின் தொடரான விளைவுகள் மீதான நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகளாகலாம் தானே***!!!?*?

மூடநம்பிக்கைகள் ஆதியில் தான் தோன்றியவையா?, இல்லை இன்றும் தோன்றியவண்ணம் உள்ளனவா? வலுவற்ற காரணிகள், அதன் தொடரான விளைவுகள் இணைவதா கடினம்...???,

மூத்தோரின் நம்பிக்கைகள் வலுவற்ற ஆதாரங்கள்/சம்பவங்கள்/ அவை மூடநம்பிக்கைகள். ஆரம்பம் முதல் இன்றுவரை விமர்சனமுடாக மாற்றங்கள் இன்றி நம்பபட்டுக்கொண்டிருக்கும். ஆதி முதல் அவை மூடநம்பிக்கைகள் தான். நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் இரண்டும் வெவ்வேறு நம்பிக்கைகள் அனைத்தும் மூடநம்பிக்கை எனலாமா? ***??? 
 
மூடநம்பிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்த ௯டியவை, அவை பரிசோதனைக்கு மூலங்களையும் சந்தர்ப்பங்களையும் இலகுவாக தர௯டியவை அல்லவா???** ஆனால் முடிவுகள் இன்னுமோரு மூடநம்பிக்கையாகத்தானே இருக்கும்??????
 
நம்பிக்கைகள் ஆய்வுக்குட்படும் ஆனால் பொரும்பாலானவற்றுக்கு ஆய்வுக்குறிய மூலங்களை இன்றைய மனிதனின் அறிவால் பெற்றுக்கொள்ள முடியதிருப்பது நிஐம் தான்!!!  தோல்விகளை திசை திருப்பி விடுவது மனித இயல்பு தானே!?? அதனால்  எம்மால் நிருபிக்கப்பட முடியாத பல நம்பிக்கைகளை மூடநம்பிக்கையாக திசை திருப்பி விடுகிறோமோ???? புரியவில்லை எனக்கு..!! [இது தான் இன்று எமது வெற்றி??!!] 

ஆய்வுக்குகிடைக்காத அந்த மூலங்களை தேடி எடுத்து அதன் முடிவை தீர்மானிப்பது சிறப்பான வெற்றியல்லவா??? ஆனால் ஆய்வே செய்யாது நாம் எடுக்கின்ற சில தீர்மான்ங்களே மூடநம்பிக்கையாகலாம் தானே!!!*?? 

ஊர் பெரியவர் ஒருவர் ["அட கடைச்சரக்குக்குத்தான்  ஆடம்பர ஆர்ப்பாட்ட விள்ம்பரங்களும் தம் இருப்பை நிலை நாட்ட தரசான்றுகளும் தேவையடா! சீக்கிரம் அவை அதனை பெற்றிடும் நிஐம் விளம்பரங்கள் செய்யாது அமைதியாக இருக்கும்"] - அப்படி என்கிறார்.

ஆஹா என் தேடல் புது பரிமாணம் கொள்கிறது போலும்..... தொடரட்டும் நல்லபடி.......

[வானம் பாடியின் தேடலுக்கு வலுசேர்க்க ௯ட்டருகே வந்து தோட்டத்தை
வாசம் வீசிட செய்திடுங்கள்]

Feb 2, 2010

இது என் கானம்...!



இது வானம்பாடியின் முதல் கானம், வலைப்பூக்களில் வாசம் வீசும் மலர்களிடையே ஒரு கீதம்பாடியாய் எனது வானம்பாடியும்.கீதமிசைத்திட வருகிறது. இது என் ஒரு வருட தவமிது, சின்ன மனதின் செல்லக்கனவுகளில் ஒன்று, இன்று தான் இறக்கை கட்டிக்கொள்கிறது. இனி என்ன சிட்டுக்கு சிறகு முளைத்துவிட்டது, தவறாமல் பறக்கும்.
சிறகடிக்கின்ற இந்த வானம்பாடியின் கீதங்களில் என் சின்ன சின்ன ஆசைகளும்,கண்ணோடு வருகின்ற கனவுகளுடன் கூடவே சிறகடித்து பறக்கின்றபோது அந்த வெண்பஞ்சு மேககூட்டங்கள் காதோடு கிசுகிசுத்துவிட்ட செய்திகள்,என் சின்னவுடல் தழுவிச்செல்லும் வீசும் காற்று என்கூட பகிர்ந்து கொள்கின்ற வேடதாரி உலகத்தாரின் வேஷங்கள் மொத்தத்தில் நிஐத்தின் நிழலை கண்டு வந்து சொல்லும்!!.


சிறகடிக்கும் இந்த வானம்பாடிக்கும் பதிவுலக சரணாலயத்தில் ஓர் சிறு கூடு கிடைத்திடுமா??


சிட்டுக்கு சிறகடிக்க என்ன கட்டுப்பாடு..... 
அதை வெட்டிப்போடு ....!!!